2 கைக்கடிகாரங்களின் மதிப்பு 5 கோடி இல்லை: ஹர்திக் பாண்டியா விளக்கம்...

மும்பை விமான நிலையத்தில் தன்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  2 கைக்கடிகாரங்களின் மதிப்பு 5 கோடி அல்ல என்று கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார்.
2 கைக்கடிகாரங்களின் மதிப்பு 5 கோடி இல்லை: ஹர்திக் பாண்டியா விளக்கம்...
Published on
Updated on
1 min read

2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியதை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் ஊர் திரும்பியுள்ளனர். ஹர்திக் பாண்டியா துபாயில் இருந்து கடந்த ஞாயிற்று கிழமை இரவு மும்பை திரும்பினார். அப்போது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியா-வின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அப்போது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள் முறையான ரசீது இல்லாமல் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஹர்திக் பாண்டியா, தன்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கைக்கடிகாரங்களின் மதிப்பு மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பு ஒன்றரை கோடி எனவும், 5 கோடி அல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தான் கொண்டு வந்த பொருள்களை காண்பித்து, சுங்க கட்டணத்தை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com