அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில்...இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில்...இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தல்!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. 

அயா்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிாிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.

இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலில் தனது தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயா்லாந்து அணி வீரா்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினா். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 23-ந்தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.