இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி; தொடரை வென்றது இந்தியா!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் கிாிக்கெட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரா்கள் களமிறங்கினா். அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. சுமாா் 1 மணி நேரத்திற்கு மேல் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு 33 ஓவரில் 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 28 புள்ளி 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.  

இதையும் படிக்க: "உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் பாஜக ஆட்சி" முதலமைச்சர் குற்றச்சாட்டு!