8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...

உலக குத்துச்சண்டை தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

8 பதக்கங்களுடன் வீடு திரும்பிய இந்திய குத்துச்சண்டை வீரர்கள்...

பல்கேரியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அனாமிகா, அனுபமா மற்றும் கோவிந்த் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர். மகளிர் 81 கிலோ எடைப்பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மாவிடம் பூஜ்ஜியத்திற்கு 5 என்ற புள்ளிகள் கணக்கில் அனுபமா தோல்வி கண்டார்.

50 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை ஹூ மெயி-யிடம் அனாமிகா தோல்வியைத் தழுவினார். இதேபோல், ஆடவர் 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கோவிந்த் சஹானி, உஸ்பெகிஸ்தான் வீரரிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் படிக்க | 76 வயதில் தடகளம்.... தேசிய போட்டியில் சாதனை செய்த சாமுவேல்!!!

மொத்தத்தில், அனுபமா, அனாமிகா மற்றும் கோவிந்த் வீரர்கள் வெள்ளிப்பதக்கங்களும், கலைவானி, ஷ்ருதி, மோனிகா, சச்சின் மற்றும் நிஸ்வாமித்ரா ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளனர்.

இவர்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (Boxing Federation) தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களது போட்டோக்களை பதிவிட்டு பெருமை பதிவு போட்டுள்ளது. இதற்கு பலரும் பதில் பதிவிட்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | IND VS AUS : 2 வது டெஸ்ட் தொடரிலும் அசத்திய இந்திய அணி...!


தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க வீராங்கனை வைஷாலி தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

செஸ் வீரர்கள் ஒவ்வொருவரின் மிகப் பெரிய கனவு என்பது கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதுதான். ஆனால், சர்வதேச செஸ் அரங்கை பொருத்தவரை ஆண்கள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதை விட பெண் வீராங்கனைகள் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பெண் செஸ் வீராங்கனைகள் இதுவரை 41 நபர்கள் மட்டுமே பட்டம் பெற்றுள்ளது குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படிக்க : இந்தியா VS ஆஸ்திரேலியா : 4-வது 20 ஓவர் போட்டியை வென்றது இந்திய அணி!

இந்நிலையில்தான், தமிழக வீராங்கனை வைஷாலி செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.  இதன்மூலம் இந்தியாவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது பெண் வீராங்கனையும், தமிழகத்தில் முதல் பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 

செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான மூன்று தகுதிகளைப் வைஷாலி பெற்றிருந்த நிலையில், கிளாசிக் செஸ் போட்டியில் இரண்டாயிரத்து 500 புள்ளிகளைக் கடந்து கிராண்ட் மாஸ்டராக வளர்ந்துள்ளார். இந்தியாவின் கோனேரு ஹம்பி,  ஹரிகா ஆகியோரைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைஷாலி பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில்  20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2 க்கு 1 என இந்திய அணி முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில் 4-வது போட்டி ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 37 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 35 ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிக்க : டிசம்பர் 4 -ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 36 ரன்களை எடுத்தார். இதையடுத்து இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

4வது இருபது ஓவர் போட்டியில் வெற்றிப் பெற்றதையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது.

சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4 கார் பந்தயத்துக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. 

இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்த நிலையில் இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ஹரிஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, இந்த கார் பந்தயத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான இடத்தில் நடத்துவதால் பெரிய அளவில் அசவுகரியம் ஏற்படும்,
பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன. சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும் என்று வாதிட்டார்.. 

மேலும், இந்த பந்தயத்தை நடத்த எந்த முன் அனுமதியும் பெறவில்லை, ராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய விதிகளில் இடமில்லை ராணுவ அதிகாரிகளிடமும் அனுமதி பெறவில்லை எனவே இந்த பந்தயம் நடந்தால் போக்குவரத்து அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டு வட சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்  என்றார்.

அதற்கு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த பந்தயம் ஏற்கனவே நொய்டா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும். மனுதாரர் கூறுவதுபோல் ஒலி மாசு அதிகம் இருக்காது. கார்களின் சத்தத்தை கட்டுப்படுத்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த இடத்தில் நடத்த திட்டமிட்டிருப்பது சாமான்ய மக்களும் கார் பந்தயத்தை காண வாய்ப்பு ஏற்படும். ஏற்கனவே, துறைமுகம், ராணுவம், கடற்படை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் உரிய அனுமதிகளை பெற்றே இந்த பந்தயம் நடத்தப்படவுள்ளது என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க:  பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு; டிச.3-ல் உண்ணாவிரதம் அறிவிப்பு!

தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளது. தமிழ்நாடு அணி மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன், மைதானத்தில் 13வது தேசிய சீனியர் ஹாக்கி போட்டி கடந்த 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை களைகட்டியது. இதன் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பஞ்சாப் மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் பஞ்சாப் அணியில் விளையாடி பெனால்டி கார்னரில் கோல் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இரு அணிகளும் சம பலத்துடன் மாறி மாறி கோல் அடிக்க பிரதான நேரம் முடிவில் இரண்டுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

வெற்றியை தீர்மானிக்க பெனால்டி-ஷர்ட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்த ஆட்டத்தில் அணல் பறந்தது. இறுதியில் 9-8 என்ற கோல்கள் கணக்கில் பஞ்சாப் அணி த் ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

முன்னதாக மூன்றாவது இடத்திற்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியும் 3-3 என்ற கோல்கள் கணக்கில் டிராவில் முடிவடைந்ததால். வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அசத்திய தமிழ்நாடு வீரர்கள் அனைத்து வாய்ப்பையும் கோலாக மாற்றி ஐந்துக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்து வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.

பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார். முதலிடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு தங்கப்பதக்கம் இரண்டாவது இடம் பிடித்த ஹரியானா அணிக்கு வெள்ளி பதக்கமும் மூன்றாவது இடம் பிடித்த தமிழ்நாடு அனைத்து வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க:"10 ஆண்டுகளில் யானையை பார்க்க முடியாது" உயர்நீதிமன்றம் வேதனை! 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறும் நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீஃல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி கிாிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், 2003-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதையும் படிக்க : "18 வயதானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்வர வேண்டும்" - சத்யபிரத சாஹூ

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கான டாஸை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பீஃல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன்காரணமாக, முதலில் இந்திய அணி களமிறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவின் பேட்டிங்கை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

முன்னதாக, டாஸ் நேரம் முடிந்ததையடுத்து சிறப்பு ஏற்பாடாக விமானப் படையின் வான்வெளி சாகசம், இசை நிகழ்ச்சி, லேசர் மற்றும் லைட் ஷோவும் நடைபெற்றுள்ளது.