ஒலிம்பிக் போட்டிகள்,.இந்திய வீரர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜப்பான் முடிவு,.! இதுதான் காரணமா.?

ஒலிம்பிக் போட்டிகள்,.இந்திய வீரர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க ஜப்பான் முடிவு,.! இதுதான் காரணமா.?

டெல்டா வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளின் போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நீங்காத நிலையில் போட்டிகள் நடைபெற உள்ளதால், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு வார காலத்திற்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்த பிறகே அனுமதி அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.