விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்!!

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்!!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில் நடைபெற்று வருகின்றன. இதன் ஆடவர்  ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் தனாசி கோக்கினாகிசை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.  

மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில், 2 முறை விம்பிள்டன் சாம்பியனான பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இஸ்னர், 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முர்ரேவுக்கு அதிர்ச்சியளித்தார்.