ஒலிம்பிக்: காலிறுத்திக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக்: காலிறுத்திக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில்இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்-ஐ  எதிர்கொண்டார்.

இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12-ஆம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4-ஆம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.