டோக்கியோ ஒலிம்பிக்... வீராங்கனைகளை அதிக அளவில் அனுப்பிய ரஷ்யா, அமெரிக்கா...
பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் ஒலிம்பிக் போட்டிக்கு அதிக எண்ணிக்கையில் வீராங்கனைகளை அனுப்பி வைத்துள்ளது.

குடும்பத்துடன் நேரத்தை செலவிட இருப்பதாக தனது ஓய்வு குறித்த செய்தியில் செரீனா தகவல்..!
23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலகின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக இருந்து வரும் செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
வில்லியம்ஸ் சகோதரிகள்: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் செரீனா வில்லியம்ஸ். 1999-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் உலக மக்களை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவர் மட்டுமில்லாது இவரது சகோதரியும் டென்னிஸ் வீராங்கனை ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து சர்வதேச அரங்கில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளனர்.
39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர்.
319 வாரங்கள் முதல் இடம்: இதுதவிர மகளிர் WTA 73 ஒற்றையர் பட்டங்களையும், 23 இரட்டையர் பிரிவு பட்டங்களுடன் சேர்த்து 4 முறை ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்று அசத்தியவர். 40 வயதாகும் செரீனா தனது டென்னிஸ் வாழ்க்கையில் 319வாரங்கள் சர்வதேச வீராங்கனை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தவர்.
2017-க்கு பிறகு வெற்றி இல்லை: கடைசியாக இவர் 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, வேறு எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கூட முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
ஓய்வு அறிவிப்பு: எதிர்வரும் அமெரிக்க ஓபன் தொடரில் களமிறங்கவுள்ள செரீனா, அதன் பிறகு டென்னிஸ்ஸில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்திற்காக நாட்களை செலவழிக்க திட்டம்: வாழ்க்கையில் அனைவருக்கும் எப்போதாவது வேறு திசையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும், அதுவும் நமக்கு பிடித்தமான ஒன்றை விட்டு விலக வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்ட செரீனா வில்லியம்ஸ், தற்போது டென்னிஸை விட்டு விலகிதான் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். இனி தனது குடும்பத்திற்காக நாட்களை செலவழிக்க விரும்புவதாக அவர்
தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நினைவாக்கும் வகையில் தொடங்கப்படவுள்ள South India Schools Cricket Associations அமைப்பின் தலைவராக ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன் அமைப்பு:
இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்
(South India Schools Cricket Associations) அமைப்பு தொடங்கப்பட உள்ளதாக அமைப்பின் நிர்வாகிகள் ஜான் அமலன்,பிரதீப் குமார், ஏபிஜேஎம்ஜே ஷேக் சலீம், ஜோஷ்வா எடிசன், குடந்தை அஷ்ரப், விக்னேஷ் மாஜினி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
திறமை இருந்தும் சாதிக்க முடியாத நிலை:
இந்தியாவில் அதிக மக்களால் விளையாடப்படும் மற்றும் விரும்பப்படும் விளையாட்டு கிரிக்கெட் போட்டி. ஆனால், பலர் திறமை இருந்தும் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க முடியாமல் போகிறது. காரணம், இளம் வயதில் திறமையாக கிரிக்கெட் விளையாடும் பலருக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வழி தெரியாததும், சரியான வழிகாட்டி இல்லாததும் தான்.
தேசிய அளவில் எடுத்து செல்லும் அமைப்பு:
அந்த வகையில் கிரிக்கெட்டில் திறமை மிக்க இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வதோடு திறமையாளர்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தளமாக South India Schools Cricket Associations தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் தேர்வு:
அதன்படி, பள்ளி காலத்திலேயே இளைஞர்களை ஊக்குவித்து கிரிக்கெட் உலகில் ஜொலிக்க வைக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ஜான் அமலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளராக பிரதீப்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக ஜோஸ்வா எடிசன், பொருளாளராக குடந்தை அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், South India Schools Cricket Associations கௌரவத் தலைவராக சினேகா நாயரும், தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் பெடரேஷன் கௌரவத் தலைவராக அப்துல்கலாம் அவர்களின் பேரனுமான ஏ.பி.ஜே.எம்.ஜே.ஷேக் சலீம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பதவி ஏற்க உள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் தொடர் நிறைவு பெற்றது. 22 தங்கம், 16 வெள்ளிகளுடன் 61 பதக்கங்களை குவித்த இந்தியா, பதக்கப்பட்டியலில் 4ம் இடத்தை பிடித்தது.
22வது காமன்வெல்த்
22வது காமன்வெல்த் போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் கடந்த மாதம் 28ம் தேதி, கோலாகலமாக தொடங்கியது. இதில் நீச்சல், தடகளம், பேட்மிண்டன், கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, ஹாக்கி, மல்யுத்தம், ஸ்குவாஷ் உட்பட 20 விளையாட்டுகளில் மொத்தம் 280 பந்தயங்கள் அரங்கேறியது. புதிதாக, 20 ஓவர் மகளிர் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் சேர்க்கப்பட்டன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல், பலத்த எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்டது.
இந்த தொடரில், 72 நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில், 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர்.
தங்கம்
துப்பாக்கிச்சுடுதல் போட்டி நீக்கப்பட்டதால், இந்தியா பதக்கப்பட்டியலில் பின்வாங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், லான் பவுல்ஸ், ஜூடோ, தடகள போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியது.
மல்யுத்தத்தில் ஆறு தங்கப் பதக்கங்களும், குத்துச்சண்டையில் மூன்று தங்கப் பதக்கங்களும் இந்தியாவிற்கு கிடைத்தன. பேட்மிண்டன் தொடரில் 3 தங்கத்தையும், பளு தூக்குதலில் 3 தங்கத்தையும் இந்தியா உச்சிமுகர்ந்தது.
4ஆம் இடம்
மொத்தம் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் இந்தியா 4ம் இடத்தை பிடித்தது. 67 தங்கம், 57 வெள்ளி என மொத்தம் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தும், மூன்றாம் இடத்தில் கனடாவும் வகித்தன.
நிறைவு விழா
இந்த நிலையில், காமன்வெல்த் நிறைவு விழா, பர்மிங்ஹாமின் அலெக்சாண்டர் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்றது. வண்ண வண்ண, வாண வேடிக்கைகள் விண்ணில் மிளிர, இசை, நடன நிகழ்ச்சிகள் களைகட்டின.
அந்தந்த நாட்டின் வீரர், வீராங்கனைகள் குழுவாக, தங்கள் நாட்டுக்கொடியை ஏந்திச் சென்றனர். இந்திய சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலும், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீனும் தேசியக்கொடியை ஏந்தினர்.
My highlight of the whole commonwealth games is Punjabi MC during the closing ceremony @chetanv82 #punjabimc #mundiantobachke #closingceremony #CommonwealthGames2022 pic.twitter.com/B9A3as8j9W
— Rob (@Swindon_Gooner) August 8, 2022
அடுத்த போட்டி
2026ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய இந்தியவீரர்களுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Black Sabbath closes the Commonwealth Games!!! pic.twitter.com/zdhm3nbPN1
— Bianca Stone (@Bianca_Stone) August 8, 2022
காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரி வில் இந்திய வீராங்கனை பி வி சிந்து முதன்முதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
கனடா வின் மிச்செல்லி-ஐ வீழ்த்தி அபாரம்
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் 5ம் இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரி வின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னதாக சிங்கப்பூரின் யோ ஜியாவை, இந்திய வீராங்கனை பி. வி.சிந்து வீழ்த்தினார். தொடர்ந்து இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதிசெய்த அவர், இறுதிப்போட்டியில் கனடா வின் மிச்செல்லி உடன் களம் கண்டார். இதில் 21-க்கு 15 மற்றும் 21க்கு 13 என்ற செட் கணக்கில் மிச்செலை வீழ்த்தி பி. வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரி வில் தங்கம் வென்று அசத்தல்
காமன்வெல்த் போட்டிகளில் 2014ம் ஆண்டு வெண்கலத்தையும் 2018ம் ஆண்டு தங்கத்தையும் வென்ற பி. வி.சிந்து, முதன்முறையாக தற்போது தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் பயிற்சி எடுக்கக் கூட டெல்லி அரசு எவ்வித உதவியும் செய்து தந்ததில்லை என பகிரங்க சாடல்..!
பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை திவ்யா கக்ரான், அன்றும் இன்றும் எதுவும் எனக்காக மாறவில்லை என செய்துள்ள ட்வீட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
திவ்யா கக்ரான்: டெல்லியை சேர்ந்தவர் திவ்யா கக்ரான். இவர் ஒரு மல்யுத்த வீராங்கனை. கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் நடைபெற்ற 18-வது ஆசியப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றவர் திவ்யா கக்ரான்.
முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு: இந்த ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் மாறி மாறி பரிசுத் தொகையை அறிவித்தது. இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த திவ்யா கக்ரான், அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இன்று நான் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற எனக்கு எதிர்காலத்தில் அதிக உதவி செய்வதாக கூறினீர்கள், ஆனால் நான் உதவி கேட்ட போது எனக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இப்போது என்னை வாழ்த்தி பரிசுகளை வழங்குகிறீர்கள், ஆனால் எனக்கு உண்மையில் உதவி தேவைப்பட்ட போது நீங்கள் வழங்கவில்லை என டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சரமாரியாக சாடியிருந்தார்.
2022-காமன்வெல்த் போட்டியில் வெண்கலம்: இந்த நிலையில் இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தின் 68 கிலோ பெண்கள் பிரிவில் டெல்லியை சேர்ந்த திவ்யா கக்ரான் மீண்டும் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ப்ளாஷ் பேக்: காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ள வீரர்களுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள திவ்யா கக்ரான், ” இப்போது நீங்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சி தான், ஆனால் மல்யுத்த வீரர்கள் பயிறி எடுக்கக் கூட டெல்லி அரசு எவ்வித உதவியும் செய்து தந்ததில்லை” எனவும் சாடியுள்ளார். அத்தோடு, கடந்த 2018-ம் ஆண்டு முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது வைத்த குற்றச்சாட்டு வீடியோவை பகிர்ந்து, ”அன்றும், இன்றும் எதுவும் எனக்காக மாறவில்லை” எனவும் ட்வீட்டில் பகிர்ந்துள்ளார் திவ்யா கக்ரான்.