மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர்.. 49 ரன் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி அபார வெற்றி

மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், டிரையல் பிளேசர்ஸ் அணியை 49 ரன் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி வென்றது.

மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர்.. 49 ரன் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி அபார வெற்றி

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கள் நடைபெறும் அதேவேளையில், மகளிருக்கான டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சேலஞ்ச் தொடர் நேற்று தொடங்கியது. இதில்,ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சூப்பர் நோவாஸ், ஸ்மிரிதி மந்தானா தலைமையில் டிரையல் பிளேசர்ஸ், தீப்தி ஷர்மா தலைமையில் வெலாசிட்டி ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

புனேவில் நடைபெற்ற முதல் போட்டியில், சூப்பர் நோவாஸ் - டிரையல் பிளேசர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த சூப்பர் நோவாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன்கள் விளாசினார்.

இதனையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டிரையல் பிளேசர்ஸ் அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் நோவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.