டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 10-ம் ஆண்டு நினைவு தினம்...பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை!

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் 10-ம் ஆண்டு நினைவு தினம்...பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை!

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்ட நினைவு இல்லத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். 

பத்திரிக்கை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது நினைவாக சென்னை போயஸ் தோட்டத்தில் நினைவு இல்லம் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டி...வேட்பாளரை அறிவித்த எடப்பாடி...தொகுதி இதுதான்!

இந்நிலையில் இன்று பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட திருவுருப்படத்திற்கு தினத்தந்தி குழும தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து, பாமகவின் கௌரவ தலைவர் ஜி கே மணி மற்றும் ஆர். கே. மூர்த்தி ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி  மற்றும் வணிகர் சங்கப் பேரவை தலைவர் விக்ரம ராஜா, தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன், எம்.பி விஜய் வசந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் மரியாதை செலுத்தினர்.