சேலம் வழியாக சென்ற ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்..!

சேலம் வழியாக சென்ற ரயிலில் இருந்து 16 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம் வழியாக சென்ற ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்..!

வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதை தடுக்க அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்படி இன்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், தன்பாத் - ஆழப்புழா விரைவு ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு பெட்டி ஒன்றில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டதில், சுமார் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பையின் உரிமையாளர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.