"2 கோழிப்பண்ணைகள்".. திடீரென பரவிய தீ.. 8,500 குஞ்சுகள் தீயில் கருகி பலியான சோகம்!!

கோவை அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

"2 கோழிப்பண்ணைகள்".. திடீரென பரவிய தீ..  8,500 குஞ்சுகள் தீயில் கருகி பலியான சோகம்!!

அன்னூரை அடுத்துள்ள ஆம்போதி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் அதே பகுதியில் 2 கோழிப்பண்ணைகள் வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 8 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது. மேலும் தீவினங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து நாசமாகியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.