மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 4 அரிய வகை குரங்கு குட்டிகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு  கடத்தி வரப்பட்ட 4 அரிய வகை குரங்கு குட்டிகள் பறிமுதல்

சென்னை  பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கன்காணித்தனர். அப்போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது  அவர்களை நிறுத்தி விசாரித்தனர் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். 

மேலும் படிக்க | புதிய உயரம் தொடும் ஐஸ்வர்யா மேனன்

அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். 

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சதுப்பு நில காடுகளில் வசிக்கும்     டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மாண்டட் கெரேசா என்ற குரங்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என அரிய வகை 4 குரங்கு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றி பயணியிடம் விசாரித்த அபூர்வ வகை குட்டிகள். இதை வளர்க்க எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும் மருத்துவ பரிசோதனை செய்து நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்குதா? இல்லையா? என்பதற்கான சான்றிதழ் ஆகியவை இல்லை.

 மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறை இடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களுக்கு மூத்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் - முதல்வர்

எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 4 குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்தனர்.  பின்னர் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் வந்து பார்த்த போது இவை அபூர்வ வகையை சேர்ந்தது. 

மேலும் இதையடுத்து குரங்கு குட்டிகளை மீண்டும் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.