78 நாட்கள் நடைபெற்ற 47 வது பொருட்காட்சி நிறைவு...!

78 நாட்கள் நடைபெற்ற 47 வது பொருட்காட்சி நிறைவு...!

சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற 47வது சுற்றுலா பொருட்காட்சி  நிறைவு பெற்றது.  

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டு 47-வது இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சி கடந்த ஜனவரி 4ம் தேதி தொடங்கி தொடர்ந்து 78 நாட்கள் நடைபெற்றது. இந்த சுற்றுலா பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகளின் அரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. 

இதையும் படிக்க : சூதாட்ட தடை சட்ட மசோதாவின் 8 பக்க அறிக்கை...ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல்?

இந்நிலையில், தீவுத்திடலில் நடைபெற்ற இக்காண்காட்சிக்கான நிறைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், 8 லட்சத்து 30 ஆயிரம்  பேர் இந்த பொருட்காட்சியை பார்வையிட்டதாகவும், 2020 ம் ஆண்டு நடைபெற்ற பொருட்காட்சியை ஒப்பிடும் போது 1.15 லட்சம் பேர் கூடுதலாக இந்த ஆண்டு பார்வையிட்டுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்த பொருட்காட்சி மூலம் நேரடியாக 10,000 பேரும், மறைமுகமாக முப்பதாயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில், பொருட்காட்சியில் அதிக கவனம் பெற்ற அரங்குகளுக்கு அமைச்சர்கள் பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கி சிறப்பித்தனர்