இலங்கை கடற் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட 9 மீனவர்கள் விடுதலை...!

இலங்கை கடற் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட   9  மீனவர்கள்  விடுதலை...!

இலங்கை கடற் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை விடுவித்து ஊர்க் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து ஒன்பது மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய பின்னர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் வருகின்ற எட்டாம் தேதி அதாவது இன்று வரை மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் சிறை காவல் தேதி முடிந்து இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதில் ஒன்பது மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

 இதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க   |  வெளிமாநில தொழிலாளர் உடல்களை அரசு செலவில் எடுத்து செல்லலாம் - அரசாணை வெளியீடு!!