12 ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து...ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்!

12 ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக்குத்து...ஒரு தலை காதலால் நேர்ந்த விபரீதம்!
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவரை குன்னூர்  கீழ் பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த ஆஷிக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த 12 ஆம் வகுப்பு மாணவி வழக்கம்போல் இன்று பள்ளிக்கு செல்லும் போது பின் சென்ற ஆஷிக், இடையில் மாணவியை வழிமறித்து பேசியுள்ளார். அப்போது திடீரென ஆஷிக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில் நிலை தடுமாறிய மாணவி கீழே விழ அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பமுயன்ற வாலிபர் அஷிக்கை கிராம மக்கள் பிடித்து  காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது சம்பவம் தொடர்பாக குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com