காதலி இறந்த துக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட 16 வயது காதலன்...!
சங்கரன்கோவில் அருகே காதலி இறந்த துக்கத்தில் 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும், காதலியை எரித்த அதே இடத்தில் தன்னையும் எரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது சாயமலை மடத்துப்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் நேற்று மதியம் வாட்சப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த சிறுவன், தன் காதலி இறந்துவிட்டாள் அதனால் தானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் அதனால் தன் காதலியை எரித்த அதே இடத்தில் தன்னையும் எரித்துவிடுங்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் மற்றும் உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரிக்க முயற்ச்சித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தேவர்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.