எடியூரப்பா வழக்கில் சிக்கிய ஈபிஎஸ் உறவினர்...!

எடியூரப்பா வழக்கில் சிக்கிய ஈபிஎஸ் உறவினர்...!
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில் குடியிருப்பு கட்டுவதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவியின் சகோதார்  சந்திரகாந்த் ராமலிங்கம் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் ஊழல்:

கர்நாடக உயர்நீதிமன்ற  உத்தரவின்பேரில் பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எடப்பாடி பழனிச்சாமி மனைவியின் சகோதார் மீது வழக்கு:

லோக் அயுக்தா போலீசார், எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில், இதே முறைகேட்டில் எடப்பாடி பழனிச்சாமி மனைவியின் சகோதார் சந்திரகாந்த் ராமலிங்கத்துக்கும்  தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.  பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்பந்தம் பெற எடியூரப்பாவுக்கு சந்திரகாந்த் ராமலிங்கம் 12 கோடி ரூபாய் வழங்கியதை  லோக் அயுக்தா போலீசார் உறுதி செய்துள்ளனர. அவர் மீதும், அவருடைய கட்டுமான நிறுவனம் மீதும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com