தலைமை செயலகத்தில் வைக்கப்பட்ட தகவல் பலகை....

தலைமை செயலகத்தில் வைக்கப்பட்ட தகவல் பலகை....

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவலகங்களுக்கு செல்லும் வழியை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக வரைப்படத்துடன் கூடிய தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சிரமத்தை போக்க:

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதற்காக பல ஊர்களில் இருந்து  நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.  இதில் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோரும் அடங்கும்.  

பிரிய்லி முறையிலும்..:

அவர்கள் வந்து செல்வதில் சிரமம் இருந்து வந்த நிலையில், பார்வையற்றோரும் சுலபமாக அதிகாரிகளின் அறைகளுக்கு செல்லும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட புதிய வண்ணப் பலகைகளும், பிரெய்லி நடைபாதைகளும் ஏற்கனவே ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.

தலைமை செயலகத்தில் உள்ள நுழைவாயில், அதிகாரிகள் நுழைவாயில் என அனைத்து இடங்களிலும் வழி தெரிந்துக்கொள்ளும் வகையில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள்.... கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?!!