மதுரை ரயில் நிலையத்தை மாநிலத்தின் முன்மாதிரியாக உருவாக்க திட்டம்...சு.வெங்கடேசன் பேச்சு!

மதுரை ரயில் நிலையத்தை மாநிலத்தின் முன்மாதிரியாக உருவாக்க திட்டம்...சு.வெங்கடேசன் பேச்சு!

தமிழ்நாட்டின் முன்மாதிரி ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையத்தை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை... CBCID விசாரணை தொடக்கம்...!

மேலும், ரயில் நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள் தனித்தனியே அமைக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் முன்மாதிரியான ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் மாறும் என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.