
கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் மொட்டைக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கோயில்களில் மொட்டை போடும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரத்து 749 தொழிலாளர்களுக்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள அனிதா பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை, அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.