AC மயமாகும் புறநகர் ரயில்கள் - ஒப்பந்தப்புள்ளி கால அவகாசம் நீட்டிப்பு...!

AC மயமாகும் புறநகர் ரயில்கள் - ஒப்பந்தப்புள்ளி கால அவகாசம் நீட்டிப்பு...!

சென்னையில் குளிர் சாதன வசதியுடன் புறநகர் மின்சார ரயில்களை இயக்குவது தொடர்பாக, ஒப்பந்தப்புள்ளி கால அவகாசத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் நீட்டித்துள்ளது.  


சென்னையில் இயங்கும் புறநகர் ரயில்கள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில், புறநகர் ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. 

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றியது இந்த பேனா தான் - முதலமைச்சர்!

அதன்படி, ஏற்கனவே கடந்த ஆண்டு ஒப்பந்தப்புள்ளி கோரிய நிலையில், தற்போது ஒப்பந்தப்புள்ளிக்கான கால அவகாசத்தை மார்ச் 4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் முதல்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் புறநகர் ரயில்கள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணமாக அமைய சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு குளிர்சாதன மின்சார ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளது.