முன்னாள் அமைச்சர் மீது அதிமுகவினர் புகார் மனு..!

முன்னாள் அமைச்சர் மீது அதிமுகவினர் புகார் மனு..!

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்குவது தொடர்பாக அதிமுக சார்பில் தலைமைச் செயலாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும் சேலம் மாவட்ட திமுக செயலாளருமான செல்வகணபதி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தலைமை தாங்கி அரசு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தலைமைச் செயலாளரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், செல்வகணபதி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும், எந்தவிதமான அரசு பதவிகள் இல்லாத ஒருவர் எப்படி அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க    | அரசியல் போராட்டங்களில் நீதித்துறையை ஏன் இழுக்கிறீர்கள்? உயர் நீதிமன்றம் கேள்வி!