அப்போது அந்த மனுவை தனது இருக்கையில் அமர்ந்துகொண்டே ஆட்சியர் சமீரன் வாங்க முயன்றுள்ளார். உடனே ஏன் எழுந்து நின்று வாங்க மாட்டீர்களா' என அதிமுக எம்.எல்.ஏக்கள் கேட்க. சுதாரித்த மாவட்ட ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று அந்த மனுவை வாங்கினார். அதற்கு பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், ''இது மிகவும் தவறு சார். நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன்,'' என மாவட்ட ஆட்சியரைப் பார்த்து கூற ,மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜோ, ''என்ன பழக்கம் இது, புதுப் பழக்கமா இருக்குது,'' என, கோபத்துடன் கூற அந்த இடமே பரபரப்பானது.