சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுக் கட்சியினர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கன்னியாகுமரி, இராமநாதபுரம், தஞ்சை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.