
சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் மாநில அளவில் நடைபெறும் சிலம்ப போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசு பள்ளிகளில் 5 வயதை கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருவதாக கூறினார். 6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பொதுதேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.