பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு வைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்களை தேர்வு எழுத வைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்காக சிறப்பு தேர்வு வைக்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் மாநில அளவில் நடைபெறும் சிலம்ப போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசு பள்ளிகளில் 5 வயதை கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருவதாக கூறினார்.  6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பொதுதேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.