எஸ்.பி.வேலு மணியின் டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு...இறுதி விசாரணை எப்போது?

எஸ்.பி.வேலு மணியின் டெண்டர் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு...இறுதி விசாரணை எப்போது?

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கு:

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கி 800 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாகவும் மற்றும் சொத்து குவித்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டது.  

ரத்து செய்யக்கோரி மனு:

தொடர்ந்து, தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ். பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விரைவாக பட்டியலிடக்கோரி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜூன்னா முறையிட்டார். அவரின் கோரிக்கையை ஏற்று எஸ். பி.வேலுமணியின் இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்,

இதையும் படிக்க: சோதனை வளையத்தில் பாப்புலர் ஃ பிரண்ட் ஆஃப் இந்தியா...தொடர் கைதாகும் நிர்வாகிகள்!

இன்று விசாரணை:

அதன்படி, இந்த வழக்கானது நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறப்போர் இயக்கம் சார் பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை தரப் பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜூன்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் மோகன் ஆகியோர்  2018ல் டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல், வழக்கானது இந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது வரை உள்ள விவரங்களை விளக்கினர்.

ஒத்திவைப்பு:

இதையடுத்து, மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். மேலும், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.