மீண்டும் அதிகரித்தது தக்காளி விலை..! அதிருப்தியில் பொதுமக்கள்..!

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரே நாளில் 75 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. 
மீண்டும் அதிகரித்தது தக்காளி விலை..! அதிருப்தியில் பொதுமக்கள்..!
Published on
Updated on
1 min read

பொதுவாக கோடை காலங்களில் கிலோ 5 ரூபாய்க்கு விற்பனையாகும் தக்காளி, அண்மைக்காலமாக வரத்து குறைவு காரணமாக விலை அதிகமானது. நாளுக்கு நாள் உயர்ந்து 110 ரூபாய வரை உயர்ந்த தக்காளியின் விலை பின் படிப்படியாக குறைந்து நேற்று கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் வரத்து குறைவால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கும், சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com