தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமாணிய சுவாமி மனு...

தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமாணிய சுவாமி புதிய ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமாணிய சுவாமி மனு...

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும், தேவைபட்டால் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

 கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரமணியசாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் தழிழில் அர்ச்சனை, அர்ச்சகர் நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக சுப்ரமணிய சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷேஷ் கனோடியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 அதில், கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவது அடிப்படை உரிமை என்றாலும் அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது என்றும் கோவில் நிர்வாகம்தான் அர்ச்சகர்களை நியமிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.