”விரைவில் சிபிஐ தன் வீட்டுக் கதவைத் தட்டி விடுமோ என்று முதலமைச்சருக்கு அச்சம்” - அண்ணாமலை விமர்சனம்!
தமிழகத்தில் மாநில அரசின் அனுமதியின்றி சிபிஐ நுழைவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதை சுட்டிக்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து பதிவிட்டுள்ளார்.
மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946 (Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1989 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ் சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம். ராஜஸ்தான்,
கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததும், அதனை முதலமைச்சர் கண்டித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுப்பு... சேகர்பாபுவுக்கு சொன்ன கட்டுப்பாடுகள் என்னென்ன?
இந்நிலையில் மாநில அரசின் அனுமதியின்றி தமிழகத்தில் சிபிஐ நுழைய கூடாது என்று ஒரு அசாதாரண நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்திருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்து வெளியிட்டுள்ளார். அதில், முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ஒப்பந்தத்திற்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் 200 கோடி ரூபாய் கிக்பேக் பெற்றதாக ஏப்ரல் மாதம் தமிழக பாஜக குற்றம் சாட்டியது.
இதன் காரணமாக, விரைவில் சிபிஐ தன் வீட்டுக் கதவைத் தட்டி விடுமோ என்று பயந்த தமிழக முதலமைச்சர், இன்று மாநில அரசின் அனுமதியின்றி தமிழகத்தில் சிபிஐ நுழைவதைக் குறைப்பதில் ஒரு அசாதாரண நடவடிக்கையை எடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
In April, @BJP4TamilNadu levelled a charge that TN CM Thiru @mkstalin had received a kickback of 200 Crore Rupees for favouring a metro contract during the previous DMK regime.
— K.Annamalai (@annamalai_k) June 14, 2023
It seems like TN CM is afraid that CBI will knock at his door soon and has today taken an…