எதிர்க்கட்சி து.தலைவர் இருக்கை... சபாநாயகர் பதில் அளிக்க உத்தரவு!

எதிர்க்கட்சி து.தலைவர் இருக்கை... சபாநாயகர் பதில் அளிக்க உத்தரவு!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர். பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்ற செயலாளர், சபாநாயகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப் பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர். பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அவர்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கி அங்கீகரிக்க கோரி 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப் பியும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிடப்பட்டது.