மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்...

ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அருகில் இருந்து ஆறுதல் தெரிவித்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார். 
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ராணுவ அதிகாரி கடிதம்...

ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அருகில் இருந்து ஆறுதல் தெரிவித்ததற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டிணட் ஜெனரல் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள சென்னை தக்ஷின் பாரத் லெப்டிணட் ஜெனரல் அருண், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்ததாகவும், அந்த துயரமான நேரத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு அருகில் இருந்து தாங்கள் ஆறுதல் அளித்தமைக்கு தமது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.
 
தகவல் அறிந்த உடனே, நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து சென்று, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின்  குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம் பிடித்து விட்டீர்கள் என புகழாரம் சூட்டியுள்ள லெப்டிணட் ஜெனரல், அந்த தருணத்தில் எந்த-எந்த உதவி முடியுமோ, அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்ததாகவும், இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com