இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை!

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை!

குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வரவுள்ள நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜுலை 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்பதவிக்காக  பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா இருவரும் போட்டியிடுகின்றனர். இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு இன்று சென்னைக்கு வந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரிடையே ஆதரவு திரட்டவுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனியாக தங்களது இல்லங்களில் ஆதரவாளர்களிடையே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் இபிஎஸ்-ம், வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ்-ம் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில் ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோரினார். சென்னை வந்த அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.