மேகதாது அணைகட்டும் வரைவு திட்டம் தயாரிக்க தடை... பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்...

மேகதாது அணை கட்டும் வரைவு திட்டம் தயாரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் தடை விதிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

மேகதாது அணைகட்டும் வரைவு திட்டம் தயாரிக்க தடை... பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்...
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பாண்டியன், பூவுலகின் நண்பர்கள் ஜி.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த பிரசுரத்தை பூவுலகின் நண்பர்கள் யூவராஜ் வெளியிட்டார்.
 
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் ,
 
மத்திய அரசு தமிழகத்தை ஒடுக்க வேண்டும் என வக்கிரப் புத்தியுடன் மேகதாது அணைக் கட்ட வேண்டும் என முயற்சி செய்கிறது...
 
மேலும் தமிழக அரசு உடனடியாக காவிரி மேலாண்மை அனைத்துக்கும் நிரந்தர தலைவர் உடன் நியமிக்கப்பட வேண்டும் எனவும் ,
 
காவிரி கண்காணிப்புக் குழு அலுவலகம் பெங்களூர் நகரத்தில் உடன் ஏற்படுத்தி அணைகளில் நீர் நிர்வாகம் நீதி நிர்வாகத்தில் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்
 
காவேரி மேலாண்மை ஆணையம் இன்றைய காலத்தில் கூட்டங்கள் நடத்துவது உறுதிப்படுத்த வேண்டும்..
 
மேகதாது அணை கட்டும் வரைவு திட்டம் தயாரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு ஆணையம் தடை விதிக்க வேண்டும்.
 
கர்நாடக அரசு ஆணையம் அனுமதி இன்றி மேகதாது அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் அது குறித்து விவாதிப்பது சட்டவிரோதம் என அறிவிக்க முன் வர வேண்டும்
 
ஆணையத்தின் அனுமதி இல்லாமல் சம்மந்தப்பட்ட கர்நாடகம் தமிழகம் கேரளா புதுச்சேரி மாநிலங்களில் நீர் நிர்வாகம் மேற்கொள்ள ஆணையம் தடை விதிக்க செய்திட வேண்டும்
 
தமிழகம் வழியே கடலில் சென்று கலக்கும் காவிரி உபரி நீரை தடுத்து மேகதாட்டுவிறாகு  கீழ் தமிழக எல்லையான காசி மன்னன் இதனால் அவரை சரிக்கட்டி மேட்டூர் அணை மூலம் பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள உடனே ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்
 
காவிரியின் வலது கரை ஒகேனக்கல் வரை கர்நாடகத்திற்கு சொந்தமானது என்பதால் ராசிமணல் அணையிலிருந்து மின்சாரம் தயாரித்துக் கொள்ளவும் பெங்களூர் நகரத்திற்கு கங்கைகொண்ட கர்நாடக அரசிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்
 
மத்திய அரசும் ஜனசக்தி பிரயோக வரி குறித்த நிர்வாக அதிகாரங்களில் ஆணையம் அனுமதி என்று நேரில் தலையிடுவதை ஆணையம் அமைக்க கூடாது என்பதும் தமிழகம் வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்தார்.