சொந்த வீடு இல்லையா… வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வங்கிகள்…  

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வங்கிகள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  
சொந்த வீடு இல்லையா… வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வங்கிகள்…   
Published on
Updated on
1 min read

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வங்கிகள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்க எஸ்பிஐ, எச்டிஎப்சி ஆகிய வங்கிகள் முன்வந்துள்ளன. இதன் மூலம் சொந்த வீடு கனவை நிறைவேறி கொள்ள வாடிக்கையாளர்கள் 6.70 சதவீத வட்டிக்கு கடன் பெறலாம். பண்டிக்கை கால சிறப்பு சலுகையாக இந்த வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக ஹோம் லோனுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இந்த வட்டி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் தனியார் ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் பொதுவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை இந்த வட்டி விகிதம் செயல்பாட்டில் இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com