கொரோனாவால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை...2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

கொரோனாவால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை...2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சுவாமிமலை - சென்னை விரைவு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூா் மாவட்டம்  சுவாமிமலையில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு வேகமாக பரவிய கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை  அடுத்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 

இதையும் படிக்க : காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த பிரபல திரையரங்கம்...அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்...விசாரணையில் காவல் துறையினர்!

ஆனால், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட போதிலும் பேருந்து சேவை தொடங்கவில்லை. இதனால் நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னா் சுவாமிமலை - சென்னை விரைவு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அதனை மனிதநேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.