
எம்பிசி பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து 30க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிபதிகள், இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ஒதுக்கீடு அளிக்க முடியுமா? உள்ளிட்ட 6 கேள்விகள் அரசிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லாததால், வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது. ஆகவே வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்கிறோம்,' என்று தெரிவித்தனர்.