தேனியில் 4 பேர் மீது வழக்கு பதிவு...! வீடுகளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை....!

தேனியில் 4 பேர் மீது வழக்கு பதிவு...!  வீடுகளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை....!
Published on
Updated on
1 min read

சட்டத்துக்கு புறம்பாக வீடுகளில் மதுபானம் வைத்து விற்பனை செய்த நான்கு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு. 200 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழவடகரை மற்றும் வடகரை பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக வீடுகளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தங்கப்பாண்டி மற்றும் சுரேஷ் என்ற இரண்டு வாலிபர்களிடம் இருந்து  90க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அதேபோல் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கைலாசபட்டி மற்றும் T.கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த அம்சகொடி மற்றும் யோகேந்திரன் என்ற இரண்டு இளைஞர்களிடமிருந்து 120க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த தென்கரை காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து முறைகேடாக வீடுகளில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த நான்கு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து 110-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com