காவிரி கர்நாடகாவின் சொத்து அல்ல...அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் - டி.கே.எஸ்.இளங்கோவன்

காவிரி நதி கர்நாடகாவின் சொத்து அல்ல - ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி சொந்தம் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : பணத்துக்காக முதலாளியை கொலை செய்த ஊழியர்...!

இந்நிலையில் சென்னையில் பேட்டியளித்த டி.கே.எஸ்.இளங்கோவன், பாஜக தலைவர்கள் ஆளுங்கட்சியைத் தூண்டிவிட்டு பிரச்னையை உருவாக்குவதால், கர்நாடக அரசும் அதற்கு அடிபணிவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், காவிரி நதி கர்நாடகாவின் சொத்து அல்ல - ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் காவிரி நீர் சொந்தம் என்றும் கூறினார். மேலும், கர்நாடகாவின் முழுஅடைப்புப் போராட்டம் என்பது வெறும் அரசியல் மட்டுமே எனவும் அவர் விமர்சித்தார்.