தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு...

நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்ய வாய்ப்பு...

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இன்று நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் லேசான மழையும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.