9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!  

கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…!   

கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளள வானிலை ஆய்வு மையம் இந்த 3 நாட்களில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.