5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை...

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை...

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
Published on
அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்,  வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்  ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com