மக்களே உஷார்...தமிழகத்தில் வருகிற 3 முதல் 5 வரை...மழைக்கு வாய்ப்பு...!

மக்களே உஷார்...தமிழகத்தில் வருகிற 3 முதல் 5 வரை...மழைக்கு வாய்ப்பு...!

Published on

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாளை வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும், 3 முதல் 5ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேசமயம், சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com