மக்களே உஷார்...!தமிழ்நாட்டில் வரும் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...!

மக்களே உஷார்...!தமிழ்நாட்டில் வரும் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் அறிக்கை :

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (22.01.2023) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

அதேபோல், வரும் 23 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : அதிமுக ஆட்சி பறிபோனதுக்கு காரணமானவர்களையே...திமுக அரசு ஏமாற்றிவிட்டது...செல்லூர் ராஜூ!

தொடர்ந்து, வரும் 24 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வரும் 25.01.2023 மற்றும் 26.01.2023 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.