'சென்னை விழா -2023'...தொடங்கி வைக்கவுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

'சென்னை விழா -2023'...தொடங்கி வைக்கவுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ள சா்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவு திருவிழாவை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், 'சென்னை விழா -2023' எனும் தலைப்பில், சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழா சென்னை தீவுத்திடலில் இன்று துவங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க : டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர்...குடியரசு தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல்!

திருவிழாவில் 311 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வித்தியாசமான கைவினைப் பொருட்கள், விதவிதமான உணவுகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை பாா்வையிட வருபவா்களுக்கு நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் நிா்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 'சென்னை விழா -2023' எனும் தலைப்பில் நடைபெறவுள்ள திருவிழாவை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கவுள்ளார்.