டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!

மலைவாசஸ்தலங்களில் கண்ணாடி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், அங்குள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
Published on
Updated on
1 min read

வன பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு  நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மலைவாசஸ்தலங்களில் மது அருந்துவோர்  கண்ணாடி மது பாட்டில்களை  வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்றும் நீதிபதிகள்  கவலை தெரிவித்தனர்.

இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக 25ம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தவ்றினால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com