10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது...முதலமைச்சர் குற்றச்சாட்டு!

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது...முதலமைச்சர் குற்றச்சாட்டு!

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தையே சீரழித்துவிட்டு சென்று இருப்பதாகவும்  அதனை கூடிய விரைவில் சரி செய்து விடுவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் திடீர் ஆய்வு:

வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், மக்களிடம் காணொளி வாயிலாக நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்.  

இதையும் படிக்க: ”முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டேவைப் போல் என்னையும் கொல்ல மோடியும் அமித்ஷாவும் திட்டமிடவில்லை என நம்புகிறேன்” சுப்பிரமணியன் சுவாமி கூற காரணம் என்ன?! யார் அந்த ஹரேன் பாண்டியா?!!

தமிழகத்தை அதிமுக சீரழித்துவிட்டதாக குற்றச்சாட்டு:

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி,  சென்னை மட்டுமின்றி தமிழகத்தையே சீரழித்து விட்டதாக சாடினார். அவை அனைத்தும்  விரைவில் சீர் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.