அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு...!

அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு...!
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கள ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். இந்நிலையில், சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக விழுப்புரம் நோக்கி புறப்பட்ட முதலமைச்சர், வழியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள முதியவர்களிடம், குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவர்கள் முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com