#BREAKING | தேவர் குரு பூஜையில் பங்கேற்க பசும்பொன் செல்லும் முதலமைச்சர்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை, ஜெயந்தி விழாவில் வரும் அக். 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
#BREAKING | தேவர் குரு பூஜையில் பங்கேற்க பசும்பொன் செல்லும் முதலமைச்சர்...
Published on
Updated on
1 min read

முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜையை முன்னிட்டு  வரும் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.

வரும் 29ம் தேதி மதுரை செல்லும் முதலமைச்சர், 30ம் தேதி காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் அவர், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அவருடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி உள்ளிட்டோரும்  மரியாதை செலுத்த உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com