தமிழ்நாடு மீனவர்களை விரைந்து மீட்குமாறு...பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாடு மீனவர்களை விரைந்து மீட்குமாறு...பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேர் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் சிக்கி தவிப்பதால் அவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அ.தி. மு.க. சார்பில் பேச ஓ.பி.எஸ். யார்? ஈபிஎஸ் ஆவேச கேள்வி!

மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக பல முறை கடிதம் மூலம் சுட்டிக்காட்டி உள்ளதாகவும், பாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் வகையிலான திட்டத்தை உடனடியாக வகுத்திட வேண்டும் என்றும், இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்கள் 28 பேர் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.